நெல்லையில் தொடங்கியுள்ள அரியவகை மூலிகை கண்காட்சி, மாணவ-மாணவியர் உட்பட அனைத்து தரப்பினரிடமும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது
Oct 1 2016 11:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம், வண்ணார்பேட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி சார்பில், பழங்கால அரிய வகை மூலிகை தாவரங்கள் மற்றும் மூலிகை பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், திப்பிலி, அதிமதுரம், கோரசானம் உள்ளிட்ட மூலிகைப் பொருட்களும், அடர் வனப்பகுதியில் மட்டுமே காணப்படும் ஆணி காற்றாழை, தாமிரைக்காய், ஆரை போன்ற 150-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த தாவரங்களுக்கான அறிவியல் பெயர்கள், குணாதிசயங்கள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. இந்த மூலிகை கண்காட்சியின் முதல் நாளான நேற்று, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.