முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக குணமடைந்திருப்பதாக அப்பலோ மருத்துவமனை அறிவிப்பு - மருத்துவர்கள் ஆலோசனைப்படி, முதலமைச்சர் ஓய்வு எடுத்து வருவதாகவும் தகவல்
Oct 1 2016 11:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நன்றாக குணமடைந்திருப்பதாக அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி, முதலமைச்சர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா, சென்னை அப்பலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையைத் தொடர்ந்து, அவர் பூரண குணமடைந்து நலமுடன் உள்ளார் என்றும், முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி, முதலமைச்சர் மருத்துவமனையில் இன்னும் ஒருசில நாட்கள் தங்கி ஓய்வு எடுத்து வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதனிடையே, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருவதாகவும் அ.இ.அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.