முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து நலமுடன் இருக்கிறார் - மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருவதாக, அப்பலோ மருத்துவமனை தகவல் : அரசுப் பணிகளை முதலமைச்சர் நாள்தோறும் மேற்கொண்டு வருவதாக அ.இ.அ.தி.மு.க. அறிவிப்பு

Sep 30 2016 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நன்றாக குணமடைந்திருப்பதாக அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி, முதலமைச்சர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா, சென்னை அப்பலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையைத் தொடர்ந்து, அவர் பூரண குணமடைந்து நலமுடன் உள்ளார் என்றும், முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி, முதலமைச்சர் மருத்துவமனையில் இன்னும் ஒருசில நாட்கள் தங்கி ஓய்வு எடுப்பார் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனிடையே, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண உடல்நலத்துடன் இருப்பதாக அ.இ.அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

அ.இ.அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் பேரன்பால், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலத்துடன் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் திரு. கருணாஸ் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00