உலக இருதய தினம் : காரைக்குடியில் நடத்தப்பட்ட மினி மாராத்தான் ஓட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்பு
Sep 29 2016 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக இருதய தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 29-ம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மினி மாராத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.
இதேபோல், உலக இருதய தினத்தையொட்டி தூத்துக்குடியில் நடைபயிற்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.
புதுச்சேரியில் செவிலியர் கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆபத்தை உணர்வோம் வாழ்க்கையை வலப்படுத்துவோம் என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இப்பேரணியில், இருதயத்தை காப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கைகளில் ஏந்தி சென்றனர்.