முதலமைச்சர் ஜெயலலிதா, பரிபூரண உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு திருக்கோவில்களில் அ.இ.அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு வருகின்றனர்

Sep 25 2016 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பரிபூரண உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு திருக்கோவில்களில் அ.இ.அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வடசென்னை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், தண்டையார்பேட்டை அனுமன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரார்த்தனையில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

வடசென்னை பகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான கழகத் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், வேம்படி இசக்கி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் சிவாச்சாரியார்கள் மந்திரம் முழுங்க ஆயுஷஹோமம் நடத்தப்பட்டது. கோட்டை பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் தொண்டர்கள் அக்னிசட்டி ஏந்தி பிரார்த்தனை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாநகர் மாவட்டக்கழகம் சார்பில், அருள்மிகு வீரராகவ பெருமாள் திருகோவிலில் தன்வந்திரி ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

திருப்பூர் புறநகர் மாவட்டக்கழகம் சார்பில், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழக மகளிரணி சார்பில், சுருட்டபள்ளியிலுள்ள அருள்மிகு பள்ளிகொண்டீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மதுரவாயல் பகுதிக் கழகம் சார்பில், போரூர் சிவ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன.

கரூர் நகரக்கழகம் சார்பில், அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் ஆயுஷ்ஹோமம் நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டம் பாலக்கரை ரெட்டைப்பிள்ளையார் ஆலயம், உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் ஆலயம், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான உத்தமர் திருக்கோயில், புத்தூர் திரௌபதி அம்மன் ஆலயம் ஆகியவற்றில் கழகம் மற்றும் கழகத்தின் பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், பிரப்பன்வலசையில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிவகங்கை மாவட்டக்கழகம் சார்பில் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. கொல்லங்குடி, அழகாபுரி நாச்சிசியம்மன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தேனி மாவட்டம் அருள்மிகு ஸ்ரீபெத்தாட்சி விநாயகர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அரியலூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், கோதண்டராமசாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கழகத் தொண்டர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டக் கழகம் சார்பில், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் ஆலயத்தில் பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

விழுப்புரம் வடக்கு மாவட்டக்கழகம் சார்பில் அகதீஸ்வரர் கோயிலில் தொண்டர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவிலில் சிவாச்சாரியார்கள் 108 மூலிகைகளை கொண்டு ஆயுஷ்ஹோமம் நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் கொட்டிவாக்கம் மற்றும் கந்தன்சாவடி அருகேயுள்ள ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள விநாயகர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகளும், பெள்ளாதி தர்காவில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், தாமரைக்குளம் தங்ககனகம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.

வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் பாபா பாஷா சாகேப் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

வேலூர் நகரிலுள்ள மகாவிஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில் சிறப்பு பிரார்தனைகள் நடைபெற்றன.

நாகை மாவட்டத்தில் கம்பர் பிறந்த ஸ்தலமான தேரழந்தூரில் அமைந்துள்ள ஆமருவியப்பன் ஆலயத்திலும், குத்தாலம் ஆதிகேசவபெருமாள் ஆலயத்திலும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

சீர்காழியையடுத்த அண்ணன் பெருமாள் ஆலயத்தில் சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் 108 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநிலக்கழகம் சார்பில், பஞ்சவடி ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில், கழகத் தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00