வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள்: தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றன
Sep 25 2016 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள்: தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகின்றன
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கின்றன.
2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் கடந்த 11-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, கழகம் மற்றும் கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களின் பெயர்கள் மற்றும் புதிதாக குடி வந்துள்ளவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 2-வது கட்டமாக இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகின்றன.