கிரிக்கெட் மட்டையால் ஒரே கையில் 2 மணி நேரத்திற்கு மேல் பந்தை தட்டி மதுரை மருத்துவ கல்லூரி மாணவர் கின்னஸ் சாதனை
Sep 17 2016 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மருத்துவ கல்லூரி மாணவர், கிரிக்கெட் மட்டையால் ஒரே கையில் 2 மணி நேரத்திற்கு மேல் பந்தை தட்டி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மதுரை மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயிலும் மாணவர் கௌதம நாராயணன், கின்னஸ் சாதனை முயற்சிக்காக, ஒரே கையால் கிரிக்கெட் மட்டையின் மூலம் தொடர்ந்து பந்தை தட்டி சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஒன்றரை கிலோ எடையுள்ள கிரிக்கெட் மட்டையால், 2 மணி நேரம் 14 நிமிடம் தொடர்ந்து பந்தை தட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இதுபோன்ற சாதனை முயற்சியில் முந்தைய சாதனையான 2 மணி நேரம் என்பதை முறியடித்து, கௌதம நாராயணன் புதிய சாதனைப் படைத்துள்ளார். இதற்காக நடைபெற்ற விழாவில், அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, கலந்துகொண்டு மாணவரின் சாதனைக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சார்பில் பாராட்டுத் தெரிவித்தார்.