கிருஷ்ணகிரியில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி, விவசாயிகளிடையே அமோக வரவேற்பை பெற்றது
Aug 27 2016 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில், தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வேளாண் உற்பத்திப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமின்றி, பூச்சிகளை கட்டுப்படுத்தும் மருந்துகள், காய்கறி வகைகள், நாற்றுச் செடிகள் உள்ளிட்டவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் இக்கண்காட்சியில், பயிர் செய்வதற்கு முன்பு மண் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என வலியுறுத்திய வேளாண் அதிகாரிகள், மண்ணிற்கு தகுந்தாற்போல் உரமிட்டு வேளாண் பணிகளை மேற்கொண்டால், அதிகப்படியான விளைச்சலும், லாபமும் பெறலாம் எனவும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர். இந்த வேளாண் கண்காட்சியை பார்வையிட்ட ஏராளமான விவசாயிகள், வேளாண் உற்பத்தி நுணுக்கங்களை அறிந்துகொள்ளும் வகையில் இக்கண்காட்சி அமைந்ததாகப் தெரிவித்தனர்.