கோவையில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்
Aug 27 2016 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, கோவையில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவ-மாணவியர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கோவை அரசு மகளிர் பாலிக்டெக்னிக் கல்லூரி அருகே தொடங்கிய இப்பேரணி, வ.உ.சி. மைதானத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியின் போது, டெங்கு காய்ச்சல் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மாணவ-மாணவியர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.