சென்னை மூர்மார்க்கெட் மற்றும் பேசின்பிரிட்ஜ் ரயில் வழிதடங்களில் இறுதிக்கட்ட சீரமைப்பு பணிகள் - அடுத்த மாதம் 17,18 தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
Aug 27 2016 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மூர்மார்க்கெட் மற்றும் பேசின்பிரிட்ஜ் ரயில் வழிதடங்களில் நடைபெற்று
வந்த சீரமைப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால், சில ரயில் சேவையில் மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்துள்ளது.
சென்னை மூர்மார்க்கெட் மற்றும் பேசின்பிரிட்ஜ் ரயில் வழிதடங்களில் நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனையொட்டி, ரயில்பாதை மற்றும் ரயில் நிறுத்தும் இடம், ரயில் நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல மேலாளர் திரு. Anupam Sharma, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், 46 நாட்கள் சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும், இதன் காரணமாக வரும் 17, 18 ஆகிய தேதிகளில் மூர் மார்க்கெட் வளாக ரயில் நிறுத்தத்தில், மின்சார ரயில்கள் முழுமையாக இயங்காது என்றும், அதற்கு பதிலாக கடற்கரை நிறுத்தத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு மாதகாலம் விரைவு ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வராமல், பெரம்பூர் வழியாக இயங்கும் என்றும், சென்ட்ரல் செல்லும் பயணிகள், பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து பயணம் செய்யலாம் என்றும், இதேபோல ஹவுரா மெயில் விரைவு ரயில் சென்ட்ரலில் இருந்து இயங்காமல், கடற்கரையிலிருந்து இயங்கும் என்றும் திரு. Anupam Sharma தெரிவித்தார்.
எனினும், பணிகள் காரணமாக எந்தவிதமான ரயில்களும் ரத்து செய்யப்படாமல், அனைத்து ரயில்களும் முழுமையாக வழக்கம்போல் இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருவதாகவும், மேலும் ஒரு மாத காலத்தில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த பிறகு, ரயில் சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.