உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
Aug 27 2016 11:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக தேர்தல் ஆணையர் திரு. சீத்தாரமன் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் ஒன்றாம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை அ.இ.அ.தி.மு.க-வினர் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட அ.இ.அ.தி.மு.க அம்மா பேரவை மற்றும் மகளிர் அணி மீனவரணி சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.