ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் மும்முரம்
Aug 27 2016 8:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஆணைப்படி, 1 கோடியே 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, காளிங்கராயனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த அணைக்கட்டு பகுதியில் பூங்கா அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காளிங்கராயனுக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி பணிகள் நடைபெறுவதற்கு விவசாயிகள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர். காளிங்கராயன் வாய்க்கால் மூலம் சுமார் 15,743 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.