விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 12,248 பேருக்கு 9 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறு வணிகக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன
Aug 25 2016 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல்வேறு வகையான கடன்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சிறுவணிகர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும், 12,248 பேருக்கு 9 கோடியே 6 லட்சம் ரூபாய் அளவுக்கு சிறுவணிகக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயன்பெற்ற சிறுவணிகர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.