விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்ய தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது
Aug 25 2016 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேரிட்ட விபத்தில், 12 வயது நிரம்பிய அவிநாஸ் என்ற சிறுவனுக்கு சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டது. அவனது உடல் உறுப்புகளை தானம் செய்ய, பெற்றோர் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து, சிறுவனின் உடல் உறுப்புகள், மருத்துவக் குழுவினருடன் தனி விமானம் மூலம், சென்னை கொண்டு செல்லப்பட்டது.