சத்தியங்கலத்தில் நூல்கோல் அதிக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி : முழு மானியம் வழங்கி விவசாயிகளுக்கு துணை நிற்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

Aug 25 2016 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

சத்தியங்கலத்தில் நூல்கோல் அதிக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழு மானியம் வழங்கி விவசாயிகளுக்கு துணை நிற்கும் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்திய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மானியத்துடன் கூடிய பல்வேறு வேளாண் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் காரணமாக விவசாயிகள் அதிக விளைச்சல் கண்டு லாபம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மலைப் பகுதியல் உள்ள கிராமங்களில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ குணம் கொண்ட நூல்கோல் பயிரிடப்பட்டுள்ளது. 50 நாள் விளைச்சலுக்கு பிறகு அறுவடை செய்யப்படும் இந்த நூல்கோல், தற்போது நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், தோட்டக்கலை துறை மூலம் மானிய விலையில் தரமான விதைகள், நூறு சதவீத மானியத்துடன் சொட்டு நீர் பாசன வசதி போன்றவைகளை வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேட்டுபாளையம் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து வரும் ஏராளமான வியாபாரிகள், நூல்கோலை கிலோ 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00