அரசு தொடக்க பள்ளிகளில் புதிய வடிவில் தமிழ்பாடங்களை கற்பிக்க குறுந்தகடுகள் - இசை பாடலுடன் ஆர்வத்துடன் பயிலும் சிறாறர்கள்
Aug 25 2016 7:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அனைத்து தமிழ்பாடங்களில் உள்ள பாடல்களை, இசையுடன் பாடும் வகையில் தயாரிக்கப்பட்ட குறுந்தகடுகளை, மாணவ-மாணவிகளுக்கு வழங்கியதுடன், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி, இந்த குறுந்தகடுகள் மூலம் தமிழகம் முழுவதிலும் தொடக்கப் பள்ளிகளில் இசையுடன் கூடிய பாடல்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
மதுரை ஒத்தக்கடையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தமிழ்ப்பாடங்களில் உள்ள செய்யுள் மற்றும் பழமொழிகளை பாடல்களாக வடிவமைத்து, காணொலி மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. பாடல்கள் மூலமாக கற்பது மிகவும் எளிமையாக இருப்பதாகவும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மாணவ-மாணவிகளும், ஊழியர்களும் குறிப்பிட்டுள்ளனர்.