கும்பகோணத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கியுடன் கூடிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டன : பொதுமக்கள் பெரிதும் வரவேற்பு
Aug 25 2016 7:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் குற்றச்செயல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கும்பகோணத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கியுடன் கூடிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி கும்பகோணம் நகரம் முழுவதும் காவல்துறை சார்பில் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கும்பகோணம் நகரம் முழுவதும் 96 அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டு, கிழக்கு காவல் நிலைய நவீன கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நெரிசல் மிகுந்த முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் இந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒலிபெருக்கி மூலம் சீர்செய்யப்படும். மக்கள் அதிகளவில் கூடும் பேருந்து மற்றும் ரயில் நிலையம், மகாமக குளம், உச்சிபிள்ளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒலிப்பெருக்கியுடன் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்கள் அமோக வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.