மூன்றாயிரம் வகையான நெற்றி பொட்டுக்களை சேகரித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்
Sep 2 2016 11:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மூன்றாயிரம் வகையான நெற்றி பொட்டுக்களை சேகரித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பெண்ணுக்கு அந்த அமைப்பு 10 பதங்கங்களை வழங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்நதவர் கலைவாணி. பட்டதாரி பெண்ணான இவர், ஏதாவது ஒரு சாதனை புரிய வேண்டுமென கருதி பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டுக்களை சேகரிக்க தொடங்கினார். தற்போது மூன்றாயிரம் வகையான பொட்டுக்களை சேகரித்து காட்சிக்கு வைத்த அவர், அதன் விவரங்களை கின்னஸ் உலக சாதனை அமைப்பிற்கு அனுப்பி வைத்தார். இவரது இந்த சாதனையை அங்கீகரித்த கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதற்கான சான்றிதழையும், 10 பதக்கங்களையும் வழங்கியுள்ளது. ஏற்கனவே லிம்கா சாதனை புத்தகம், ஆசிய சாதனை புத்தகம், இந்திய சாதனை புத்தகம் ஆகியவற்றில் சாதனை பெண்மணி கலைவாணியின் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.