வேளாங்கண்ணியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் மாணவ - மாணவியர்கள் ஏராளமான படைப்புகள் இடம்பெற்றிருந்தன
Jul 30 2016 2:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாங்கண்ணியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் மாணவ - மாணவியர்கள் ஏராளமான படைப்புகள் இடம்பெற்றிருந்தன.
மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டந்தோறும் புத்தாக்க அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெற்ற கண்காட்சியில் 173 பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு, அவர்கள் உருவாக்கிய நீர் இறைக்கும் இயந்திரம், மழைநீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரம், ஆளில்லா லெவல் கிராசிங் பாதுகாப்பு சாதனம் போன்றவை காட்சிபடுத்தப்பட்டிருந்தன. அமைச்சர் திரு. ஓ.எஸ். மணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கே. கோபால், மாவட்ட ஆட்சியர் திரு. க. பழனிசாமி உட்பட ஏராளமானோர் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டனர்.