மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை கண்டித்து சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் சார்பில் ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
Jul 30 2016 1:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை கண்டித்து சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் சார்பில் ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.சி. பள்ளிகளின் வட்டார தலைவர் அருட்தந்தை திரு. ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு இந்த வரைவு கொள்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சமஸ்கிருதத்தை திணிக்கும் நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.