ஆடிப்பெருக்கு விழாவை, தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணை வந்தடைந்தது : கல்லணையில் இருந்து கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு - பாரம்பரியமான ஆடிப்பெருக்கு விழாவுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு, விவசாயிகளும், பெண்களும் நன்றி
Jul 30 2016 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடிப்பெருக்கு விழாவை, தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணை வந்தடைந்தது. கல்லணையில் இருந்து கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, முதலமைச்சருக்கு, விவசாயிகளும், பெண்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு, மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர் வரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, காவேரிப் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கினை கொண்டாடும் வகையில், மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக விடுவிக்கப்பட்டு வரும் 2 ஆயிரம் கனஅடி நீருடன் கூடுதலாக, கடந்த 25-ம் தேதி முதல், வரும் 28-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதமும், அதன்பிறகு வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நாளொன்றுக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கடந்த 25-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று மாலை கல்லணை வந்தடைந்தது. இந்தத் தண்ணீர், கடைமடைப்பகுதி வரையில் செல்லும் வகையில், கல்லணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு ஆயிரத்து 500 கட அடியும், வெண்ணாற்றில் இருந்து ஆயிரம் கனஅடியும், கல்லணைக்கால்வாயில் இருந்து 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர், காவிரிப் பாயும் கடைமடைப்பகுதியான பூம்புகாருக்கு வரும் 2-ம் தேதிக்குள் சென்றடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் போதிய நீரின்றி இருந்த நிலையிலும், பாரம்பரியமான ஆடிப்பெருக்கு விழாவினை விவசாயிகளும், பெண்களும் கொண்டாடி மகிழும் வண்ணம் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, விவசாயிகளும், பெண்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.