அரசின் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் எளிதில் பெற வழிவகை செய்யும் இ-சேவை திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்
Jul 30 2016 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசின் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் எளிதில் பெற வழிவகை செய்யும் இ -சேவை திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
அரசால் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்டங்களைப்பெற பொதுமக்கள் பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் சென்று விண்ணபித்து பெறப்பட்டு வந்த நிலையை மாற்றி அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களில் எவ்வித சிரமமுமின்றி எளிதாக சான்றிதழ்கள் வழங்கும் முறை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீ்ரங்கம், தொட்டியம், திருவெறும்பூர், மணப்பாறை, துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இ சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திருவெறும்பூர் வட்டாச்சரியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்படும் இ சேவை முகாமை, திருச்சி மாவட்ட ஆட்சியர்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பட்டா மாறுதல் மற்றும் வருவாய்த்துறை சான்றுகள் கோரி விண்ணப்பித்து ஆணை பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை பயனாளிகளிடம் வழங்கினார்.
பட்டா மாறுதலுக்காக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாச்சியரிடம் பலநாட்கள் சென்று அலைந்து திரிந்து பணிகளை மேற்கொள்வதை தவிர்த்து இசேவை மையம் மூலம் குறுகிய காலத்தில் பணிகள் நிறைவடைவது மிகுந்த பயனளிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள பொதுமக்கள், இத்திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.