முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின்கீழ், நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டுப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
Jul 30 2016 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின்கீழ், நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டுப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைத்து வருகிறது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்க சுத்திகரிப்பு நிலையம் நாகர்கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வுப் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. இதில் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளர் திரு.விஜயகுமார் எம்.பி., மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.