டச்சு படைகளை திருவிதாங்கூர் படைகள் வென்ற 275-ம் ஆண்டு நினைவு தினம் : வரலாற்று சம்பவங்களை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், ஓவிய கண்காட்சியை அமைத்து கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சமூக ஆர்வலர்கள் நன்றி
Jul 30 2016 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குளச்சல் துறைமுகத்தில் நடைபெற்ற போரில், டச்சு படைகளை திருவிதாங்கூர் படைகள் வென்ற 275-ம் ஆண்டு நினைவு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. வரலாற்று சம்பவங்களை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், ஓவிய கண்காட்சியை அமைத்து கொடுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பண்டைய காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா ஆட்சி காலத்தில், கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை கைப்பற்ற டச்சு நாட்டு படைகள் கடல் வழியாக குளச்சல் பகுதியை நோக்கி வந்தனர். அப்போது தனது ராஜாதந்திர முறையை மன்னர் கையாண்டதை தொடர்ந்து டச்சு படைகள் சரணடைந்தன. இந்த வெற்றியை போற்றும் வகையில் குளச்சல் துறைமுக பகுதியில் வெற்றித் தூண் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் இந்திய ரானுவத்தால் வீர மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 275-வது வெற்றி தினம நாளை அனுசரிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், வரலாற்றை பேணி பாதுகாக்கும் வகையிலு, இளைய தலைமுறையினர் அரிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வகையிலும், போர் தொடர்பான காட்சிகள் அங்கு உயிரோட்டமான ஓவியங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகளும், மாணவ - மாணவிகளும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். வரலாற்று சம்பவங்களை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், ஓவியக் கண்காட்சியை அமைத்து வரலாற்றுக்கு பெருமை சேர்த்த முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவிற்கு சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.