கனமழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Jul 30 2016 7:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 44 புள்ளி இரண்டு ஒன்பது அடி உயரமுள்ள இந்த அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 320 கனஅடி வீதம் நீர்வரத்து இருப்பதால், 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் தற்போது வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆற்றின் கரையோரம் உள்ள பார்த்தகோட்டா, பேரண்டபள்ளி, காமன்தொட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.