முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவுக்கிணங்க, திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள வரதமாநதி அணைக்கட்டு பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.

Jul 29 2016 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு வரதமாநதியிலிருந்து, பழனி வையாபுரி கண்மாய் பாசனத்திற்கு வினாடிக்கு 60 கனஅடி வீதம் 3 நாட்களுக்கும், இடும்பன் குளம் கண்மாய் பாசனத்திற்கு வினாடிக்கு 5 கனஅடி வீதம் வாரத்திற்கு 3 நாட்களுக்கும், பழனி வாய்க்கால் பாசனத்திற்கு வினாடிக்கு 5 கனஅடி வீதம் வாரத்திற்கு 3 நாள் என தண்ணீர் திறந்துவிடுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று வரதமாநதி அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் திரு. பாஸ்கரன், மேயர் திரு. மருதராஜ் உள்ளிட்டோர் திறந்துவைத்து, மலர் தூவினர். இதன் மூலம், வரதமாநதி அணை பாசனத்திற்கு உட்பட்ட கிழக்கு ஆயக்குடி, மேற்கு ஆயக்குடி, பழனி, எருமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 800 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதிபெறும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00