திருப்பூரில், தமிழக அரசு சார்பில் திறக்கப்பட்டுள்ள கொப்பரை தேங்காய் கொள்முதல் மையத்தில், அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Jul 27 2016 8:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில், தமிழக அரசு சார்பில் திறக்கப்பட்டுள்ள கொப்பரை தேங்காய் கொள்முதல் மையத்தில், அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தென்னை விவசாயிகளின் நலன்கருதி, கொப்பரை தேங்காய் கொள்முதலை அரசே ஏற்று நடத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 45 இடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கேயம், குடிமங்கலம், அவினாசி, உடுமலை உள்ளிட்ட இடங்களில் கொப்பரை தேங்காய் உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது. தாராபுரத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 672 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக, கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் தெரிவித்தார். தமிழக அரசின் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையத்தில் விற்பனை செய்வதால், அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00