முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான நல்லாட்சி நீதி-நெறிகளைக் கட்டிக்காக்கும் ஆட்சியாகவும் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் நலன்களை முழுமையாகப் பாதுகாக்கும் ஆட்சியாகவும் திகழ்வதாக சட்டப்பேரவையில் பாராட்டு
Jul 27 2016 6:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான நல்லாட்சி, நீதி-நெறிகளைக் கட்டிக்காக்கும் ஆட்சியாகவும் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் நலன்களை முழுமையாகப் பாதுகாக்கும் ஆட்சியாகவும் திகழ்வதாக சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று, 2016-17ம் ஆண்டுக்கான திருத்த நிதிநிலை அறிக்கை மீது நடைபெற்ற பொது விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய, கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் திரு. உ. தனியரசு, தமிழக மக்கள் நலனுக்காக, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களையும் வெகுவாகப் பாராட்டினார்.