நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுடெல்லியைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேரின் மறைவுக்கு கழக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்
Jun 25 2016 7:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுடெல்லியைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேரின் மறைவுக்கு, கழக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு.G. கண்ணுசாமி, திருவாரூர் மாவட்ட விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் திரு.செம்பை C.ராமச்சந்திரன், புதுடெல்லி மாநில கழக பொதுக்குழு உறுப்பினர் திரு.ப.பெரியசாமி ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.
அன்புச் சகோதரர்கள் திரு.கண்ணுசாமி, திரு.ராமச்சந்திரன், திரு.பெரியசாமி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், நாமக்கல் மாவட்டம் R. பட்டணம் பேரூராட்சிக் கழக செயலாளர் திரு.சேவல் M.சிவானந்தம் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.
கழகத்தின் மீதும் கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால கழக உடன்பிறப்பு திரு.சிவானந்தத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.