சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, திருச்சியில் கராத்தே ஆசிரியர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி காண்பித்தார்
Sep 2 2016 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மலைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் கராத்தே ஆசிரியரான டிராகன் ஜெட்லி. இவர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கராத்தே, குங்க்ஃபூ உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறார். 50 முறை உலக சாதனை நிகழ்த்தியுள்ள இவர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் முன்னிலையில், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி காண்பித்தார். 40 கிலோ எடையை தூக்கிக்கொண்டு 54 வினாடியில் 41 சிட்அப்ஸ், 13 தர்பூசணிப் பழங்களை 18 வினாடிகளில் உடைத்தல், உயரமான ஸ்டூலில் தலைகீழாக நிற்றல் என அவர் நிகழ்த்திய 8 சாதனைகளை கண்டு கூடியிருந்த பொதுமக்கள் பெரிதும் வியப்படைந்தனர். இந்த சாதனை விவரம் லிம்கா, Asia Book of Records குழுக்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.