பேருந்து பயணத்திற்கான ஆயிரம் பயணச்சீட்டுகளை சேகரித்து ராமநாதபுரம் கல்லூரி மாணவி சாதனை
Sep 2 2016 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தஹ்மிதா பானு, பேருந்தில் பயணம் செய்யும்போது, ஒரே வழித்தடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணச்சீட்டுகளை சேகரித்து, புதிய சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை அங்கீகரித்துள்ள India Book of Records, மாணவிக்கு விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கியுள்ளது. பயணச்சீட்டுகளை கசக்கி வீசி, பேருந்துகளை மாசுப்படுத்துவதை தடுக்கும் வகையிலும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த சாதனையை நிகழ்த்தியதாக தஹ்மிதா பானு குறிப்பிட்டுள்ளார். தனக்கு அளிக்கப்பட்ட விருது, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றதாகவும் அந்த மாணவி தெரிவித்தார்.