பல்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவத்தை வரைந்து கோவையைச் சேர்ந்த ஒவியர் சாதனை
Sep 2 2016 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரத்தை கட்டணமில்லாமல் வழங்கியுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கோவையைச் சேர்ந்த ஒருவர், பல்பு ஒன்றின் உட்புறம் தூரிகையைக்கொண்டு, முதலமைச்சரின் உருவத்தை தத்ரூபமாக ஒவியமாக வரைந்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் வகையில், வீட்டு உபபோகிப்பாளர்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்க உத்தரவிட்டு, அத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. முதலமைச்சரின் இந்த மக்கள் நலன் சார்ந்த திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கோவையைச் சேர்ந்த திரு. யு.எம்.டி. ராஜா என்பவர், பல்வேறு வண்ண தூரிகைகளைப் பயன்படுத்தி, பல்பு ஒன்றில், உட்புறத்தில் துளையிட்டு, முதலமைச்சரின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 8 கிராம் தங்கத்தில் பல்வேறு ஓவியங்களை இவர் ஏற்கெனவே வரைந்து, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.