தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காரை பற்களால் இழுத்து சாதனை படைத்த மாணவர் - பொதுமக்கள் பாராட்டு
Sep 2 2016 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் காரினை பற்களால் 100 மீட்டர் தூரம் இழுத்து 14 வயது மாணவன் சாதனை படைத்துள்ளான்.
கோவில்பட்டியைச் சேர்ந்த இந்த சாதனை மாணவனின் பெயர் ராஜன்பாபு. யோகா மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட ராஜன் பாபு, விளையாட்டுப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த திட்டமிட்டான். இதற்காக, கோவில்பட்டியில் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. செண்பகவள்ளி அம்மன் கோயில் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவன் ராஜன்பாபு, காரினை கயிறு கட்டி, அதனை பற்களால் கடித்து 100 மீட்டர் தூரம் இழுத்து சென்று சாதனைபுரிந்தான். ராஜன்பாபுவின் இந்த சாகசத்தை கண்டு வியந்த பார்வையாளர்கள், சாதனை மாணவனை வெகுவாகப் பாராட்டினர்.