மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடலூர் மீனவர்கள் நன்றி
May 27 2016 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு கடலூர் மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 45 நாட்கள் மீன்பிடித்தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்களது விசைப்படகுகள் சீரமைக்கும் பணி, வலைகள் பழுது பார்க்கும் பணி, வண்ணம் தீட்டும் பணி என அனைத்து பணிகளையும் முடித்து, தற்போது மீன்பிடிக்க தயார் நிலையில் உள்ளனர். மேலும், நாளை மறுதினத்துடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதையொட்டி, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீனவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில், மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்ததை, 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை தொடர்ந்து மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.