அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கூட்டுறவு வங்கிகளிடம் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதற்கு ஈரோடு மாவட்ட விவசாயிகள் வரவேற்பு - நன்றி
May 27 2016 11:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கூட்டுறவு வங்கிகளிடம் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதற்கு ஈரோடு மாவட்ட விவசாயிகள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் முதலமைச்சராக 6-வது முறையாக கடந்த 23-ம் தேதி பதவியேற்றக்கொண்ட, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, முதல் பணியாக, அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முதல் கையொப்பமிட்டார். வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ள முதலமைச்சருக்கு, விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளனர்.