முதலமைச்சர் ஜெயலலிதாவை பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர், துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர், அவை முன்னவர், அரசு தலைமைக் கொறடா ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
May 27 2016 10:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில், பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர், துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர், அவை முன்னவர், அரசு தலைமைக் கொறடா ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, 15-வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் திரு. ப. தனபால், துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் திரு. பொள்ளாச்சி வி. ஜெயராமன், சட்டமன்றப் பேரவையின் அவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள திரு.சு. ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.