அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, கட்டணமில்லா 100 யூனிட் மின்சாரம் வழங்கும் திட்டம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி
May 27 2016 10:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
6-வது முறையாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, கட்டணமில்லா 100 யூனிட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தியதற்காக முதலமைச்சருக்கு, பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அமோக வெற்றிபெற்று 6-வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள செல்வி ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில், 5 முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். இல்லந்தோறும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், பயிர்க்கடன் ரத்து, 500 டாஸ்மாக் கடைகள் மூடல் மற்றும் திறந்திருக்கும் நேரம் குறைப்பு, தாலிக்கு தங்கம் ஒரு சவரனாக அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த அறிவிப்புகள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலான கட்டணமில்லா 100 யூனிட் மின்சார சலுகை திட்டத்திற்கு, மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.