முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால், நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு அணை - மத்திய அரசின் துணை மேற்பார்வைக் குழுவினர் இன்று நேரில் ஆய்வு
May 27 2016 10:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பலனாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய துணை மேற்பார்வைக் குழுவினர், அணைப் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 தென்மாவட்ட விவசாயிகளுக்கும், அப்பகுதி மக்களின் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, இடைவிடாது சட்டப்போராட்டம் மேற்கொண்டு அதில் வெற்றியும் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அ.இ.அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக-கேரள அதிகாரிகளை உள்ளடக்கிய மேற்பார்வைக்குழு இன்று முல்லைப் பெரியாறு பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறது.