சர்வதேச காணாமல் போன குழந்தைகள் அனுசரிப்பு தினம் : பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் விநியோகம்
May 25 2016 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் அனுசரிப்பு தினத்தை முன்னிட்டு, பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஏ.சுந்தர வல்லி விநியோகித்தார்.
தமிழ்நாடு சமூக பாதுகாப்புத் துறை சார்பில், சர்வதேச அளவில் காணாமல் போன அகுழந்தைகள் அனுசரிப்பு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் இரயில் நிலைய வளாகத்தில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், பொது இடங்களில் குழந்தைகளை பார்த்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு விளக்கங்கள் பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டன. குழந்தையின் சமீபத்திய புகைபடத்துடன், பெற்றோரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட முழு விபரங்கள் அடங்கிய அட்டை குழந்தையிடம் எப்பொழுதும் இருக்க வேண்டும் - அறிமுகம் இல்லாத நபர்கள் மூலமாக குழந்தையை பள்ளிக்கோ அல்லது பிற இடங்களுக்கோ அனுப்பக்கூடாது என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.