SSLC தேர்வு முடிவுகளால் ஏமாற்றமடைந்த மாணவ, மாணவிகளுக்கு அரசின் 104 தொலைபேசி மருத்துவ சேவை மூலம் உளவியல் ஆலோசனை
May 25 2016 10:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
SSLC தேர்வு முடிவுகளால் ஏமாற்றமடைந்த மாணவ, மாணவிகளுக்கு அரசின் 104 தொலைபேசி மருத்துவ சேவை மூலம் இன்றும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களின் தற்கொலை முயற்சிகள் தடுக்கப்பட்டிருப்பதாக உளவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, மாணவ, மாணவிகள் சிலர் எதிர்பாராமல் தோல்வியடைவதாலும், குறைந்த மதிப்பெண் பிரச்சினையாலும், பல்வேறு மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திற்கும் தள்ளப்படுகின்றனர். இதனை தடுக்க தமிழக அரசு மூலம் 104 தொலைபேசி மருத்துவ சேவை அமைப்பு தொடங்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மாணவ-மாணவியர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.