முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க., அடுத்தடுத்து 2 சட்டமன்றத் தேர்தல்களில் அமோக வெற்றிபெற்ற வரலாற்றுச் சாதனையைத் தொடர்ந்து, 15-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது : சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் முதலமைச்சர் ஜெயலலிதா - அமைச்சர்கள் உட்பட புதிய உறுப்பினர்களும் உறுதிமொழி ஏற்பு

May 25 2016 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து, அமைச்சர்களும், புதிய உறுப்பினர்களும் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

தமிழக சட்டமன்றத்தின் 15-வது பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, சட்டமன்றப் பேரவை தற்காலிக தலைவர் திரு. எஸ். செம்மலை, அமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை செயலாளர் திரு. ஜமாலுதீன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். சட்டப்பேரவைக்குள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வந்தபோது, சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. பெற்ற வரலாற்று வெற்றிச் சாதனைக்காக, சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டிஉற்சாகமாக வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து சட்டமன்ற பேரவை தற்காலிக தலைவர் எஸ். செம்மலை முன்னிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் உள்பட புதிய உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவியேற்றுக் கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00