நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் : கழக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவிப்பு
May 25 2016 10:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை கழக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அ.இ.அ.தி.மு.க. பரிசீலித்து எடுத்த முடிவின்படி, வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.ஆர். வைத்திலிங்கம், கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.A. நவநீதகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திரு.A. விஜயகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் திரு.எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிறுத்தப்படுவதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.