மதுரை புறநகர் மாவட்ட எம.ஜி.ஆர் மன்ற செயலாளரும், திருபரங்குன்றம் தொகுதி சட்டமன்ற அ.இ.அ.தி.மு.க. உறுப்பினருமான எஸ். எம் சீனிவேல் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : பல்வேறு பொறுப்புகளில் கழகப் பணிகளை சிறப்புடன் ஆற்றியவர் என்றும் பெருமிதம்

May 25 2016 10:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், திருபரங்குன்றம் தொகுதி சட்டமன்ற அ.இ.அ.தி.மு.க. உறுப்பினருமான திரு. எஸ். எம் சீனிவேல் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திருப்பரங்குன்றம் தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான திரு. S.M. சீனிவேல், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு திரு. சீனிவேல், திருப்பரங்குன்றம் ஒன்றியக் கழக அவைத் தலைவர், ஒன்றியக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் கழகப் பணிகளை ஆற்றியுள்ளதோடு, 2001 முதல் 2006 வரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணிகளை சிறப்புடன் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திரு. சீனிவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.



சட்டப்பேரவையில் அஞ்சலி

மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், திருபரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமானதிரு. எஸ். எம் சீனிவேல் மறைவுக்கு, தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும், திருபரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். எம் சீனிவேல் மறைவு குறித்து, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் திரு.செம்மலை இரங்கல் குறிப்பு வாசித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00