முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடும் எதிர்ப்பையடுத்து, மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நடைபெறவிருந்த அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு ரத்து : முதலமைச்சரின் தீவிர நடவடிக்கைகளால் மீண்டும் கலந்தாய்வு முறையே நடைமுறைக்கு வந்துள்ளதாக கல்வியாளர்கள்- மாணவர்கள், பெற்றோர்கள் நெகிழ்ச்சி பாராட்டு

May 25 2016 6:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதையடுத்து, மகிழ்ச்சியடைந்துள்ள கல்வியாளர்கள், மாணவ - மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாடுமுழுவதும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவினால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கருத்து தெரிவித்திருந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என வலியுறுத்தி, பிரதமருக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, மாணவர் சேர்க்கை தொடர்பாக, மத்திய அமைச்சரவை இயற்றிய அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனையடுத்து, இந்த ஆண்டு வழக்கம்போல மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலமேநடைபெறவுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் தீவிர நடவடிக்கைகளின் காரணமாகவே பொது நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெகிழ்ச்சியுடன் அவர்கள் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர், மாணவியர் மற்றும் பெற்றோர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00