சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி உறுதி என தெரிந்துவிட்டதால், தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர், தேர்தல் ஆணையத்திடம் பொய்யான புகார் மனு - அதிகாரிகளின் இடமாற்றத்தை ரத்து செய்து அவர்களை மீண்டும் முந்தைய பணிகளிலேயே நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் நேரில் மனு
May 2 2016 11:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கும் பொய் புகாரின் அடிப்படையில், தமிழகத்தில் நேர்மையாக பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும், பணியிட மாற்றல் உத்தரவுகளை திரும்பபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அ.இ.அ.தி.மு.க. சார்பில், தலைமை தேர்தல் ஆணையர் திரு. நஜிம் ஜைதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வரும் 16-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இஅ.தி.மு.க., 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால், பொதுமக்கள் மீண்டும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை அரியணையில் ஏற்ற உறுதி பூண்டுள்ளனர். அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சமடைந்துள்ள தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர், தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து, பொய் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அ.இ.அ.தி.மு.க. சார்பில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் திரு. நஜிம் ஜைதியை, கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை தலைமையிலான குழுவினர் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், தமிழகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிமுறைகளை பின்பற்றி வருவதாகவும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தோல்வி பயம் காரணமாக பொய் புகார் அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொய் புகாரின் அடிப்படையில், இதுவரை இல்லாத அளவில் பெருமளவு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாக்டர் மு.தம்பிதுரையுடன், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் P.வேணுகோபால், திரு. ஏ. நவநீதகிருஷ்ணன், திரு. ப. குமார், திரு. B. செங்குட்டுவன், திரு. ரபிபெர்ணார்ட், திரு. T.G. வெங்கடேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.