சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மத்திய தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதம்
May 2 2016 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தமுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மத்திய தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், இன்று நடைபெற்றது. வாக்குப்பதிவின்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழக சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அடங்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மத்திய பார்வையாளர்கள் இன்று காலை சென்னை வந்தனர். தொகுதிக்கு ஒரு மத்திய பார்வையாளர் வீதம், 16 பார்வையாளர்களும் சென்னை மாநகராட்சி வளாக கட்டடத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான திரு. பி. சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர்.
மாவட்ட இணை தேர்தல் அதிகாரி திரு. கோவிந்தராஜ், பல்வேறு தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரு. அசுதோஷ் சுக்லா மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள், துணை ராணுவ படையினரை எந்தெந்த பகுதிகளில் பணியமர்த்துவது, பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்படும் வாக்குச்சாவடிகள் எவை என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோனை நடத்தினர்.