அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடக்கம் - வெயிலின் தாக்கம் மிகஅதிகமாக இருக்கும் என தகவல்
May 3 2016 6:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெயிலின் தாக்கம் மிகஅதிகமாகக் காணப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.
தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக, வேலூர், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட கோடைவாசஸ்தலங்களைத் தவிர, மற்ற இடங்களில் வெயில் வாட்டிவரும் நிலையில், வெயிலின் மிகக்கடுமையாக இருக்கக்கூடிய அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரை 14 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள பருத்தி மற்றும் தளர்வாடி ஆடைகளை அணியும்படியும், இளநீர், குளிர்பானங்கள், பழ ஜுஸ் உள்ளிட்டவற்றை அருந்தும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.