தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வுக்கு ஆதரவு - முதலமைச்சர் ஜெயலலிதாவை மீண்டும் முதலமைச்சராக்க பாடுபடுவோம் - தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
May 1 2016 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் மதுரையில் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர் தினமான மே தினத்தையொட்டி, மதுரையில் இன்று ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.போசு தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அங்கீகாரம் அளித்து, தங்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களையும், சலுகைகளையும் செயல்படுத்தி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை மீண்டும் முதலமைச்சராக்கும் வகையில், அ.இஅ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபடுவது என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், திருமங்கலம் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான திரு.R.B. உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டக் கழக செயலாளரும், மதுரை வடக்கு தொகுதி கழக வேட்பாளருமான திரு. ராஜன் செல்லப்பா, மதுரை கிழக்கு தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.தக்கார் பாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.