தே.மு.தி.க. வேட்பாளரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் - வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் எடுத்துவரப்பட்டதால் பரபரப்பு
May 1 2016 2:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் அருகே, தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் உதயகுமாரின் காரில் இருந்து 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக, அவர் பணத்தை எடுத்துச் சென்றாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, அனுமந்தை சுங்கச்சாவடி அருகே, தேர்தல் பறக்கும் படையினர் இன்று, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் உதயகுமாரின் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, உதயகுமாரின் காரில் உரிய ஆவணங்களின்றி 3 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தே.மு.தி.க. வேட்பாளர் பணம் கொண்டு சென்றாரா என்பது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தே.மு.தி.க. வேட்பாளரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.