பூரண மதுவிலக்கு என்று பேசி வரும் பா.ம.க.வின் ராமதாஸ் முன்னிலையிலேயே அக்கட்சித் தொண்டர்கள் குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் ஆத்தூரில் அரங்கேறியுள்ளது
May 1 2016 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பூரண மதுவிலக்கு என்று பேசி வரும் பா.ம.க.வின் ராமதாஸ் முன்னிலையிலேயே அக்கட்சித் தொண்டர்கள் குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் ஆத்தூரில் அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் ராமதாஸ் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது, மேடைக்கு முன்பாக பா.ம.க. தொண்டர்கள் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அவர்களை தடுக்க முயன்ற ராமதாஸை கண்டுகொள்ளாமல் தொண்டர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால், பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்றுவிட்டார்.